வெள்ளி, 18 மார்ச், 2011

இயேசு உண்மையில் சிலுவையில் அறையப்படவில்லை என்றால்...

அஸ்ஸலாமு அலைக்கும்..

www.jesusinvites.com
இணையத்தில் கிறிஸ்தவர்களின் கேள்விகளும் பிஜே அவர்களின் பதில்களும் தொகுப்பாக வெளியாகி வருகின்றன..
அதிலிருந்து ஒரு கேள்வி...


கேள்வி

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு அல்லது இறைவன் சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை?

PJ அவர்களின் பதில்

இயேசு தன்சீடர்களிடம் இந்த உண்மையைச் சொல்லத் தான் செய்தார். அவரது சீடர்களுக்கும் அதுதெளிவாக விளங்கத் தான் செய்தது. கிறித்தவ பாதிரிமார்கள் தவறான கொள்கை காரணமாககண்ணை மூடிக் கொள்வதால் அவர்களுக்கு அது விளங்காமல் போய் விட்டது. அதன் காரணமாககிறித்தவ அப்பாவிகளுக்கும் விளங்காமல் போய் விட்டது.

இயேசு சிலுவையில்அறையப்பட்டதாக அவரது சீடர்கள் எண்ணிக் கொண்டிருந்த போது இயேசு அவர்கள் முன்காட்சியளித்து கூறியதைக் கீழே காணுங்கள்.

இவைகளைக்குறித்துஅவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம்என்றார்;.

37. அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக்காண்கிறதாக நினைத்தார்கள்.

38. அவர் அவர்களை நோக்கி: நீங்கள்ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

39. நான்தான் என்றுஅறியும்படி,என் கைகளையும்என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிற படி, எனக்கு மாம்சமும் எலும்புகளும்உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

40. தம்முடையகைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

41. ஆனாலும்சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்குஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.

42. அப்பொழுது பொரித்தமீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்குமுன்பாகப் புசித்து,

44. அவர்களை நோக்கி: மோசேயின்நியாயப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்துஎழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்த போது உங்களுக்குச்சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

லூக்கா 24:37-44

இயேசு அவளை நோக்கி:என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப்போய், நான் என்பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள்தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

18. மகதலேனா மரியாள்போய், தான் கர்த்தரைக்கண்டதையும்,அவர்தன்னுடனேசொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

19. வாரத்தின் முதல் நாளாகியஅன்றையத்தினம் சாயங்கால வேளையிலே,சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப்பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச்சமாதானம் என்றார்;.

20. அவர் இப்படிச் சொல்லித்தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

யோவான் 20:18-20

யூதர்களிடமிருந்துதப்பித்து வந்த போது சீடர்கள் ஆவி என்று நினைக்கிறார்கள். ஆனால் இயேசு அதை மறுத்துநன் ஆவி அல்ல என்கிறார். மாமிசம் எலும்புகள் தனக்கு இருப்பதை காட்டுகிறார். தொட்டுப்பார்க்கச்சொல்லி உறுதி படுத்துகிறார். மேலும் அவர்களிடம் உணவை வாங்கி சாப்பிட்டுகாட்டியுள்ளார். இதில் இருந்து சிலுவையில் அவர் அறையப்படவில்லை. அவர் தப்பித்துஉயிருடன் ஓடி வந்து விட்டார் என்பதை அறியலாம். மேலும் அவர் கொல்லப்பட்டு ஆவியாகஇருந்தால் அவர் நடைப் பயணமாக பல ஊர்களைக் கடந்து சீசட்ர்களை சந்திக்க தேவை இல்லை. அடுத்தவிநாடியே சீட்ர்கள் முன் தோன்றி இருப்பார்.

இயேசு தப்பிப்பிழைத்து தான் சீட்ர்கள் முன் காட்சி அளித்தார் என்ற உண்மையுடன் பவுலடிகள் கலந்துவிட்ட பொய்யும் சேர்ந்து விட்டதால் கிறித்தவர்களுக்கு உண்மை புரியாமல் போய்விட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக