புதன், 13 பிப்ரவரி, 2013

மாற்று மத அன்பருக்கு ஒரு அழைப்பு





அஸ்ஸலாமு அலைக்கும் 

முகநூலில் இஸ்லாத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் விமர்சனம் செய்து எழுதி வருபவர்களில் ஒருவரான டாக்டர்.ஜெயப்ரகாஷ் என்பவர் பல இடங்களில் நமக்கு எதிரான விமர்சனங்களை பதிந்து வந்தார். 

சகோ. இம்ரான் ஷெரிப் சுட்டிக்காட்டியதன் பேரில், அனைத்தையும் ஒரே தளத்தில் பேசுவதற்கு ஏதுவாக எழுத்து மூலம் கலந்துரையாட முன் வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


இரு தரப்பிலும் செய்யப்படும் கலந்துரையாடல்கள் கீழே பதியப்பட்டு வருகின்றன.






நாஷித் அஹமத் 



அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும்.

முகநூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கருத்துக்களை நீங்கள் இடுவதும் அதற்கு நாம் சில பதில்களை சொல்கிற போது வேறு ஏதேனும் கருத்துக்கள் வேறு சிலரால் பதியப்படுவதன் காரணமாக தலைப்பு திசை மாறி சென்று விடுவதும் நமது நோக்கங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல தடையாக உள்ளன. அசில நரங்களில் பதியப்படும் பதிவுகள் நம்மால் கவனிக்கப்படாமல் செல்வதாலும் பதில்கள் தர இயலாமல் போகின்றன.

கருத்து பரிமாற்றம் சமமாக நடத்தப்பட முகநூலை விட மின்னஞ்சல் மூலமாக இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று சில முன் அனுபவங்கள் மூலம் நாம் உணர்வதால் அத்தகைய வழியில் நமது கருத்து பரிமாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
விவாதம் முடிந்த பிறகு அதை பொதுவில் எங்கும் அனுப்பி விடுவதற்கோ, இணையதளங்களில் இடுவதற்கோ நமக்கு ஆட்சேபனை கிடையாது. அதன் மூலம் பலருக்கும் நம் கருத்துப் பரிமாற்றம் சென்றடையும்.

உங்கள் புறத்தில் நீங்கள் 4 தலைப்புகளை குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை நான் கவனித்தேன்.

அந்த தலைப்புகளை வெறும் கேள்விகளாக வைத்துள்ளீர்கள். அதை சற்று மாற்றி, இந்த விஷயத்தில் இது எனது நிலை, ஆனால் முஸ்லிம்களாகிய நீங்களோ இப்படி சொல்கிறீர்கள் இது தவறு ! என்று வாதமாக வைத்தால் அது விவாதப்பொருளாக மாற்றம் பெறும்.

உதாரணத்திற்கு, புத்தர் சிலையை இஸ்லாம் உடைக்க சொல்கிறதா? தலிபான்களுக்கு பத்வா வேலை செய்யாதா? என்று கேள்வியாக கேட்பதற்கு பதிலாக, தாலிபான்கள் புத்தர் சிலைகளை உடைத்தார்கள் அது தவறு என்பது எனது நிலை, தாலிபான்கள் பத்வாக்களை அடிப்படையாக கொள்ளாமல் செயல்படுகிறார்கள் இதை மறுக்கும் முஸ்லிம்களாகிய உங்களுடன் விவாதிக்க வேண்டும்..

இப்படி வாதமாக வையுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள 4 விஷயங்களையும் மேலே உள்ளது போன்று திருத்தி வெளியிட்டால் அந்த நான்கை குறித்தும் விரிவாக கலந்துரையாடல் அல்லது விவாதம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த 4 அல்லாத வேறு சில தலைப்புகளையும் நான் முன் வைக்கிறேன் நீங்கள் உடன்படும் பட்சத்தில் அவற்றையும் விவாதப்பொருள் ஆக ஆக்கி கொள்ளலாம்.

  • தூக்கு தண்டனை கூடாது என்கிற உங்கள் நிலை தவறு. இது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
  • ரிசானா தூக்கிலிடப்பட்டது தவறு என்கிற உங்கள் நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.
  • விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பது தவறு என்கிற நிலையில் நீங்கள் இருந்தால் அது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
  • பெண்ணுரிமை புர்காஹ் பற்றி உங்களுக்கு இஸ்லாத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்க வேண்டும்.
  • ஹிந்து மதம் அது சொல்லும் கடவுள் கொள்கை, இஸ்லாமிய மதம் , அது சொல்லும் கடவுள் கொள்கை, இது பற்றியும் விவாதிக்கலாம்.

மேற்கண்ட அனைத்து தலைப்புகளையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு தலைப்புக்கும் குறைந்த பட்சம் தலா 5 வாய்ப்புகள் தேவை. 

அதாவது, நான் எனது முதல் பதிவை மின்னஞ்சல் மூலம் அனுப்பினால், அது கிடைத்து 24 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் முதல் பதிவை மின்னஞ்சல் செய்ய வேண்டும். இப்படியாக இருவருக்கும் 5 வாய்ப்புகள் என்றால் 10 நாட்களில் ஒரு தலைப்பு முடியும்..
ஒரே விவாதத்தில் இரண்டு தலைப்புகள் கூட வைத்துக்கொள்ளலாம். 

நாளை மாலை (அதாவது புதன்) ஆறு மணிக்கு பதில் தருவதாக நீங்கள் சொல்லியுள்ளதால் இந்த மின்னஞ்சலுக்கான பதிலை அப்போது எதிர்பார்க்கிறேன். 
தொடர்ந்து, என்றைக்கு விவாதத்தை ஆரம்பிப்பது, ஒரு வாய்ப்பு என்றால் என்ன அளவு, இரு தரப்பிலும் வேறு யாரேனும் உள்ளார்களா? என்பதையெல்லாம் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

மேலே சொல்லப்பட்டதில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் அதையும் நீங்கள் தெரிவிக்கலாம். 
இது அல்லாத வேறு ஏதேனும் தலைப்புகளில் உங்களுக்கு எங்களிடம் மாற்றுக்கருத்து இருந்தால் அதையும் தெரிவிக்கவும்.

மின்னஞ்சலை விட முகநூல் தான் உங்களுக்கு இயலும் என்றால் அதை காரணம் காட்டி நாம் விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டாம் என்பதையும் நான் உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.

கருத்துப்பரிமாற்றங்களும் விவாதங்களும் சகோதரத்துவத்தை அதிகரிக்கவே செய்ய வேண்டும் என்பதில் என்றைக்கும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------



Mani Jayaprakashvel



உங்களது சார்பில் முன்வைக்கப்பட்ட விவாதங்களைப்பற்றிய என் ஒப்புதல் நிலைப்பாடு.
  • தூக்கு தண்டனை கூடாது என்கிற உங்கள் நிலை தவறு. இது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
கண்டிப்பாக இதை விவாதிக்கலாம்.
  • ரிசானா தூக்கிலிடப்பட்டது தவறு என்கிற உங்கள் நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.
தனிப்பட்ட விவாதம் இதற்கு தேவை இல்லை. மேலுள்ள முதல் விவாதப் பொருளின் உள்ளேயே இதையும் பொதுவாக்கி விவாதிப்போம்.
  • விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பது தவறு என்கிற நிலையில் நீங்கள் இருந்தால் அது பற்றி எங்களுக்கு விவாதிக்க வேண்டும்.
இது தேவை அல்ல. எதிர்ப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. எதிர்க்கும் வழிமுறையத்தான் விமர்சித்தேன்.
  • பெண்ணுரிமை புர்காஹ் பற்றி உங்களுக்கு இஸ்லாத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்க வேண்டும்.
இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் உண்டு. அது மிக நீண்ட விவாதமாக போகும். இதை விவாதைக்க அருகதை அற்றதாக நான் என்னுகிறேன்.
  • ஹிந்து மதம் அது சொல்லும் கடவுள் கொள்கை, இஸ்லாமிய மதம் , அது சொல்லும் கடவுள் கொள்கை, இது பற்றியும் விவாதிக்கலாம்
இதுவும் தேவை இல்லை. ஏனெனில் நான் எந்த மதத்தினையும் ஆதரிப்பதில்லை. எல்லா மதங்களும் கற்பிதமான கதைகளின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டவை என்பது என் மாறாத கருத்து. அறிவியலுக்கு புறம்பான கதைகளைக் கொண்ட கடவுள் என்ற கற்பிதத்தை நான் விவாதிக்க விரும்பவில்லை.

நான் விவாதிக்க விரும்புபவை

1. 1. இஸ்லாம் சினிமா முதலான கேளிக்கைகளை விலக்கி வைக்கிறது. இரானில் அரபு நாடுகளில் பொழுதுபோக்கு அரசியல் சினிமாவே இல்லை. மஜீத் மஜீதி போன்ற உன்னத கலைஞர்கள் குழந்தைப்படங்களில் தம் கலையுன்னதங்களை படைத்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இந்த ”இஸ்லாமிய அறிஞர்கள்” என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள்? கேளிக்கைகளை இஸ்லாம் விலக்க வேண்டியதில்லை. அரசியல் பட்ங்களை இஸ்லாமிய நாடுகளில் அனுமதிப்பதில்லை. இதெல்லாம் தவறு என்கிறேன். நீங்கள் சரி என்ற கருத்தில் இருந்தால் விவாதிப்போம்

2. இஸ்லாமிய மார்க்கவாதிகள் பலருக்கும் ஃபத்வா விதிக்கிறார்கள். மிகவும் அராஜகமான வகையில் பாமியானில் புத்தை சிலைகளை உடைப்பது, பெண்ண் கல்வியை நசுக்குவது, பிணைக் கைதிகளை  கொடூரமாக தலையை வெட்டிக் கொல்வது போன்றவற்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்தக் கொடுமைக்கெல்லாம் ஃபத்வா பிறப்பிக்க மாட்டார்களா? இதை அவர்கள் கண்டிக்காதது இஸ்லாம் ஒரு ப்ழமைவாத ராணுவ மார்க்கம் என்பதை சுட்டுகிறது என்பது என் கருத்து. மாற்றுக் கருத்து இருக்குமானால் விவாதிப்போம். 

3. எதிராளி தப்பு செய்தால் அவனை நாகரீக வரம்புக்கு கீழே வந்தும் தாக்கலாம் என்பது தப்பு. (கமல்-மகள் விவகாரம்). எந்த நிலைமையிலும் சான்றான்மை தவறுதல் கூடாது. இஸ்லாம் அத்தகைய நாகரீகத்தை போதிக்கவில்லை. மாற்றுக் கருத்து இருந்தால் பேசுவோம்.

எனது மற்ற ஒரு கேள்வி மேலுள்ள விவாதபொருளில் அடங்குவதால் இதோடு நான் நிற்கிறேன். 

24 மணி நேரம் என்ற கட்டாய வரையறை சற்று கடினம். எனக்கு வேறு வேலைகளும் உள்ளன. பல தளங்களிலும் மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளேன். எனக்கு நேர்மையுணர்ச்சி அதிகம். கூடுமானவரை விரைவில் பதில் சொல்வேன். கட்டாயப்படுத்திக் கொள்ள முடியாது. அது பெரும் நெருக்கடி. அப்படி நெருக்கடியில் விவாதிக்க நான் விரும்பவில்லை. உங்கள் நிலைப்பாட்டை கொஞ்சம் தளர்த்தினால் பேசலாம்.


என் தரப்பில் வேறு யாரையும் சேர்த்துக்கொள்ள எனக்கு விருப்பமும் அவசியமும் இல்லை.

குறைந்தது ஒன்று அல்லது இரண்டை மட்டும் எடுத்து விவாதிப்போம். எந்த ஒன்று அல்லது இரண்டு என்பதை உங்கள் பொறுப்பில் விடுகிறேன். எதுவானாலும் எனக்கு சம்மதம். வாழ்த்துக்கள்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நாஷித் அஹமத்




அஸ்ஸலாமு அலைக்கும் 

முதல் தலைப்பு

பொத்தாம் பொதுவாக சினிமாவை இஸ்லாம் எதிர்க்கிறது என்று சொல்ல முடியாது. ஆபாசங்கள் ஏதும் இன்றி பெண்களை கூட இஸ்லாம் சொல்லக்கூடிய ஆடை (அதாவது முகம் மற்றும் முன்னங்கை தெரியும் வகையில் ) மற்றும் இதர கட்டுபாட்டுடன்(இசை,  ஆடல் பாடல் கூத்து கும்மாளம்மற்றும்  பெண்களை ஆண்கள் ரசிக்கும் வண்ணம் சித்தரித்தல் போன்றவைகள் இல்லாமல் ) காட்டப்படும் சினிமாக்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை என்பது தான் எங்கள் நிலை.
அந்த அடிப்படையை மீறக்கூடிய திரைப்படங்கள் என்றால் இஸ்லாம் ஆதரிக்காதுஅது இரானிய படமாக இருந்தாலும் சரிஇந்திய படங்கள் என்றாலும் சரி.
இதில் விவாதப்பொருள் ஏதும் இல்லை என்று நினைக்கிறோம். மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லவும்.

இரண்டாம் தலைப்பு :


தூக்கு தண்டனையே கூடாது என்கிற நிலை தவறு. விவாதம் செய்யலாம்.

மூன்றாம் தலைப்பு :

இஸ்லாம் ஒரு பழமை வாய்ந்த ராணுவ மார்க்கம் என்கிற உங்கள் கருத்து தவறு. விவாதிக்கலாம்.


நான்காம் தலைப்பு (உங்கள் கருத்தை இரண்டு தலைப்பாக பிரிக்கிறோம்)


 விஸ்வரூபத்திற்கு பதிலடியாக கமல் - சுருதி உறவை பற்றி பேசியது தவறா இல்லையாதவறில்லை என்பது எங்கள் நிலை. விவாதிக்கலாம்.

ஐந்தாம் தலைப்பு

இஸ்லாம் நாகரீகத்தை போதிக்கவில்லை என்கிற உங்கள் கூற்று தவறு - விவாதிக்கலாம்.


ஆறாம் தலைப்பு :

விஸ்வரூபம் படத்தை எதிர்த்த வழிமுறையை விமர்சிப்பதாக சொன்னீர்கள். எதிர்த்த வழிமுறையில் எந்த தவறும் இல்லை என்பது எங்கள் நிலை - விவாதிக்கலாம்.


ஏழாம் தலைப்பு :

புர்கா பற்றி பேசலாமாஎன்று கேட்டதற்கு அது ஒரு மூட நம்பிக்கை என்பதாக கருத்து தெரிவித்துள்ளீர்கள். புர்காஹ் அணியாதவர்கள் அல்லது அணிய தேவையில்லை என்று சொல்பவர்கள் பிற்போக்குவாதிகள் என்பதும் அணிய வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர்கள் தான் மூட நம்பிக்கைகளை விட்டும் அப்பாற்பட்ட முற்போக்குவாதிகள் என்பதும் எங்கள் நிலை. உங்கள் கருத்து முற்றிலும் தவறு - விவாதிக்கலாம்.


எட்டாம் தலைப்பு :

இஸ்லாம் சொல்லும் கடவுள் நம்பிக்கை பற்றி விவாதிக்க அழைத்ததற்கு பதில் சொன்ன நீங்கள்,, அறிவியலுக்கு புறம்பானது தான் கடவள் நம்பிக்கை என்பதாக சொல்லியிருந்தீர்கள். இது தவறான கருத்து என்பதும்இஸ்லாம் அறிவியலுக்கு உகந்த மார்க்கம் என்பதும் எங்கள் நிலை - விவாதிக்கலாம்.


விவாதம் சீரான வகையில் செல்வதற்கு சில நிபந்தனைகள் :

  1. மேற்கண்ட எட்டு தலைப்புகளை இரண்டிரண்டாக இணைத்து விவாதிக்கலாம்..
  2. ஒவ்வொரு விவாதத்திற்கும் தலா ஐந்து வாய்ப்புகள். அதாவதுநீங்கள் ஒரு மெயில் இடஅடுத்து நாங்கள் ஒரு மெயில் இடும் போது இருவருக்கும் ஒரு வாய்ப்பு நிறைவு பெறும்)
  3. ஒவ்வொரு மெயிலும் அதிக பட்சம்  75 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (உதாரணத்திற்கு மேலே நான் முதலில் எழுதிய மெயில் கிட்டத்தட்ட  50 வரிகளை கொண்டதுநீங்கள் எழுதியது கிட்டத்தட்ட  40 வரிகளை கொண்டது)
  4. வேறு இணையதளங்களின் லிங்குகளை பதியக்கூடாது.
  5. நீங்கள் ஒரு மெயிலை எழுதி  24 மணி நேரத்திற்குள் அடுத்த மெயிலை நான் எழுத வேண்டும். (24 மணி நேரம் குறைவு என்றால்  48 ஆக்கி கொள்ளலாம்)
  6. வார்த்தைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனி நபர் விமர்சனங்கள் இருக்க கூடாது.



விவாதத்தை நீங்கள் துவக்குகிறீர்களா அல்லது நாங்கள் துவக்கவா என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறோம்.
யார் துவங்குவது என்பதை பொறுத்து எந்த தலைப்பை முதலில் எடுத்துகொள்வது என்பதை தீர்மானிக்கலாம்.
வெள்ளிக்கிழமை  முதல் துவங்கலாம்.

உங்கள் இறுதி பதிலுக்காக காத்திருக்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Mani Jayaprakashvel


நாஷித் 
48 மணி நேரங்கள் என்று வைத்துக்கொள்வோம். நிறைய கண்டிப்புகள் அயற்சியைத்தருகின்றன. என்றாலும் விவாதிப்போம். ஏழு எட்டு என்ற விவாதப் பொருட்களில் எனக்கு விவாதிக்க எதுவும் இல்லை. அதை விவாதிப்பது நேர விரயம் என்றே கருதுகிறேன்.விவாதத்தை இயல்பாக கொண்டு செல்ல இரண்டாம் மற்றும் நான்காம் பொருட்களை முதலில் எடுத்துக்கொள்வோம். நீங்களே ஆரம்பியுங்கள். நான் எனது பதிலை சனிக்கிழமை வைக்கிறேன். நாளை எனக்கு நேரம் ஒதுக்குவது சிரமம். வாழ்த்துக்கள்









சங்கை ரித்வானும் "புறம்" நாடகமும்








அஸ்ஸலாமு அலைக்கும் 

அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மண்டல தலைவரை பற்றி இவர் வைத்துள்ள விமர்சனங்களை பற்றி சில விளக்கங்கள்.

சங்கை ரித்வான் என்கிற இவர், தமது முகநூல் பக்கத்தில் எழுப்பி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன், 
முதலில் இவர் முகமத் ஷேக் செய்ததாக கூறுவது என்ன என்று பார்க்கையில், ஷேக் எழுதியதாக இவர் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தி என்பதை புரியலாம்.

ரித்வானின் எழுத்துக்களை நியாயப்படுத்தி கமண்டுகள் இடுகிறவர்கள், பிரச்சனைகளை உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதற்கு முன், தர்க ரீதியில், சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த ஆள் ஏன் இப்படி பண்ணுகிறார்?
கண் பரிசோதனைக்கு ஒரு இணையதளம் இருக்கிறது அப்படின்னு ஒரு தகவல் கொடுக்க ஏன் இவ்வளவு பெரிய விளம்பரம்? ஒன்னுமே புரியவில்லை.. 

என்பது தான் ஷேக் எழுதியது. இவர் எழுதியது தவறா, என்பதை பற்றி பேசுவதற்கு முன், இவர் இதை எழுதியதற்கு தகுந்த மறுப்பை தான் ரித்வான் எழுதியுள்ளாரா? அல்லது மிகைப்படுத்தி இவரை விமர்சனம் செய்துள்ளாரா? என்பதை ஒவ்வொரும் சிந்தியுங்கள்.

ஷேக் புறம் பேசியுள்ளார் என்பதாக இவர் வைக்கும் குற்றச்சாட்டை அடுத்து விளக்குகிறேன். அதற்கு முன், 

புறம் பேசினார் என்பது தான் அவர் மீதான ரித்வானின் ஒரே குற்றச்சாட்டு என்றால் விமர்சனம் செய்கிற போது அதையல்லவா முதலில் எடுத்து சொல்லியிருக்க வேண்டும்?? ஷேக் செய்ததில் எது தவறு என்று இவர் நினைக்கிறாரோ, அதை சொல்லி விமர்சனங்களை வைத்திருந்தால் 
நியாயத்திற்காக நிற்பவராக இவரை கருதியிருக்கலாம். 

ஆனால் ஷேக் Facebook TNTJ வில் வைத்த விமர்சனத்திற்கு பதில் தரப்போவதாக சொல்லி எழுதியவர்,

நான் விளம்பர பிரியர் என்று எனது உள்ளதை அவர் அறிந்தாரா?
எனது பக்கத்தில் உள்ள நல்ல விஷயங்களை அவர என்றைக்காவது பாராட்டினாரா?
என்னை பற்றி பேச இவர் என்ன எனது தந்தையா அல்லது சகோதரனா?

என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, அதிகமாக கேள்விகள் எழுப்பி விமர்சனம் வைத்து விட்ட ஒரு தோரணையை காட்ட முயற்சிக்கிறார். 

இவர் கேள்விகளை இவர் பக்கமே நாம் திருப்பி கேட்கிறோம்.

1. ஆயிரக்கணக்கான நல்ல விஷயங்களை ஒருவர் செய்தால் அவர் செய்யும் தவறான விஷயங்களை சுட்டிகாட்ட கூடாது என்பது தான் இவரது நிலையா??

2. ஒருவரது தளத்தில் உறுப்பினராக இல்லாத எவரும் அவரது தளத்தை பற்றி விமர்சிக்க கூடாது என்பது இவரது நிலையா??

3. ரித்வான் விளம்பர பிரியர் என்று ஷேக் எங்கே சொன்னார்? அதற்கு என்ன ஆதாரம்?  
எதற்கு இந்த விளம்பரம் என்று கேட்பதும் இவர் ஒரு விளம்பர பிரியர் என்று சொல்வதும் ஒன்றா? சம்மந்தமில்லாதவற்றை இணைத்து பேசிய இவர் பொய் சொல்பவர் இல்லையா?

சரி, பிறரை விளம்பர பிரியர் என்று யார் சொன்னாலும் அப்படி சொன்னவரின் நியாயமான கூற்றையும் ஏற்க மாட்டேன் என்பது தான் இவரது நிலையா?

4. பிறரது தவறுகளை சுட்டிக்காட்ட அவரது மாமனாகவும் மச்சானாகவும், தந்தையாகவும் சகோதரனாகவும் தான் இருக்க வேண்டுமா? அப்படி எந்த உறவும் இல்லாத ஒருவர் மற்றவரை விமர்சிக்க கூடாது என்பது தான் இவரது நிலையா?


மேற்கண்ட கேள்விகளுக்கு இவர் தரப்பு பதிலை சொல்லி, ஆமாம் எனது நிலை அப்படிதான் என்று சொல்வாரானால், ஷேக் பற்றி இவர் அடுக்கிய கேள்விகளில் அர்த்தமிருக்கும். 
எந்த நிலைபாட்டை தான் கொள்ளவில்லையோ, அதை நியாயப்படுத்தி பேசுவது சந்தர்ப்பவாதம். அதை தான் ரித்வான் செய்கிறார்.

மேலும், சகோ. ஷேக் அந்த விமர்சனத்தை இவரது பக்கத்தில் பதியாமல் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் மட்டுமே உள்ள குழுமத்தில் பதிந்த விஷயம் இவருக்கு எப்படி தெரிந்தது என்பதை சிந்திக்கையில், அதில் கூட இவர் நாடகம் தான் ஆடுகிறார் என்பது தெரிகிறது. நானே அதை பார்த்தேன் என்று சொல்வதில் ஓன்று பொய் சொல்பவராக இருக்க வேண்டும், அல்லது வேறொரு நபர் உதவியுடன் இவர் உள்ளே நுழைந்து உளவு பார்த்திருக்க வேண்டும்.
இரண்டில் எதை செய்திருந்தாலும் இவர் உண்மைக்கு புறம்பானவர் என்று தெரிகிறது.

இவர் வைக்கும் கேள்விகளில் அர்த்தமுள்ள ஒரே கேள்வி என்பது, ஏன் தன்னிடம் சொல்லாமல் பொதுவில் தன்னை பற்றி விமர்சிக்க வேண்டும் என்பது தான்.

இந்த பிரச்சனைக்காக என்று இல்லை, பொதுவாகவே நாம் அனைவரும்  புறம் என்றால் என்ன என்பதை புரியாமல் போட்டு குழப்பிக் கொள்கிறோம்.

ஒருவரை பற்றிய குறையை வேறோருவரிடத்தில் சொல்வது புறம் என்பது பொதுவான சட்டம். 

ஆனால் அந்த பொதுவான சட்டத்தை வைத்து மட்டும் சிந்தித்தால் இஸ்லாத்தின் அனேக கடமைகளை நம்மால் செய்ய முடியாது, சுருங்க சொன்னால் நாம் முஸ்லிமாகவே இருக்க முடியாது.

ஒருவரது குறையை பற்றி இன்னொருவரிடத்தில் சொல்வது அனைத்துமே புறம் என்றால் நம்மால் மார்க்க பயான்கள் செய்ய இயலாது, நன்மைகளை ஏவி தீமையை தடுப்பது தான் சிறந்த அறம் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையை பேண முடியாது, சமுதயத்திற்காக குரல் கொடுக்க முடியாது, தவறுகளை தட்டி கேட்க முடியாது, வியாபாரம் செய்ய இயலாது, கொடுக்கல் வாங்கல், திருமணங்கள் செய்ய முடியாது, சுருங்க சொன்னால் அடிப்படை முஸ்லிமாக வாழ கூட முடியாது.

அதே சமயம், ஒருவரது குறையை பிறரிடம் சொல்லாதீர்கள் என்று சட்டமும் இஸ்லாமிய சட்டம் தான், அதையும் பின்பற்றத்தான் வேண்டும்.

இப்போது இந்த வேறுபாட்டை எப்படி புரிய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வாங்குவதற்காக அனுப்பிய ஒரு சஹாபி, தவறான ஒரு நிலையை கொண்டிருக்கிறார் என்பதற்காக, அவர் செய்த தவறை அவருக்கு மட்டும் உணர்த்தாமல், சமுதாயம் முழுவதையும் அழைத்து வெளிக்காட்டினார்கள்.
இது புறம் என்று நாம் சொல்வது கிடையாது.

கடைதெருவில் இருந்த திருடனை பிறருக்கு எச்சரிப்பதற்கு அவனை சுட்டிக்காட்டி பிறரிடம் சொன்னார்கள், இதை புறம் என்று நாம் யாரும் சொல்ல மாட்டோம். 

ஒரு சஹாபிய பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ள இரு சஹாபிகள் விருப்பம் தெரிவிக்கிறார்கள், என்ன செய்வது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கும் போது, அந்த இருவரிடம் இருந்த சிறு சிறு குறைகளை இந்த பெண்ணிடம் நபி அவர்கள் சுட்டிக்காட்டியதாக ஹதீஸ்கள் உள்ளன.  நபி (ஸல்) அவர்கள் புறம் பேசி விட்டார்கள் என்றா நாம் சொல்வோம்? நிச்சயமாக இல்லை.

ஆக, ஒருவரது குறையை இன்னொருவரிடம் சொல்வது ஒன்றே புறம் என்பதற்கான அளவுகோல் கிடையாது, மாறாக, சொல்லப்பட்டவரின் நோக்கம் தான் பிரதானம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் சான்று.

சங்கை ரித்வான் என்பது ஒரு தனி நபராக இருந்து, அவர் புகை பிடித்தார், மது அருந்தினார் என்கிற விஷயங்களை ஷேக் வேறு நபர்களிடம் சொன்னால், அந்த செய்தி பொய் என்றால் அது அவதூறு என்றோ உண்மை என்றால் புறம் என்றோ கருதப்படும்.

புறம் என்று இஸ்லாம் சொல்கிற எல்லா சட்டங்களுமே இந்த வகை புறத்தை தான் சொல்கின்றன. 

ஆனால் இங்கு பேசப்படுவது என்பது சங்கை ரித்வான் என்கிற தனி மனிதரின் தனிப்பட்ட செயல்களை குறித்ததல்ல. 

இது ஒரு குழுவை பற்றிய விஷயம். 
இவரே சங்கை ரித்வான் (பக்கம்) என்று சொல்லி ஒரு குழுவாக (community) தான் அவரது முக நூல் பக்கத்தை உருவாக்கி உள்ளார் எனும் பொது அங்கு செய்யப்படும் எந்த காரியமும் தனி மனிதனின் தனிப்பட்ட காரியமாக கருதப்படாது. 

இவரே இதை பொதுவான தளம் என்று பிரபல்யப்படுத்தும் வகையில், பொய்க்கு எதிராக உண்மையை சொல்வோம் , அணி திரள்வோம் என்று கூறி சமுதாயத்திற்காக குரல் கொடுக்க ஒரு தளம் என்று பிரகடனப்படுத்தி இது ஒரு சமூக தளம் என்று தானே ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்..

அந்த வகையில், பொது வாழக்கையில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்றால் அவரை பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்கத்தான் வேண்டும். அப்போது தான் சமுதாயம் நன்மையின் பால் செல்லவும்  தவறுகளில் இருந்து மீளவும் முடியும். 

தவிர, இவரது பக்கத்தில் தவ்ஹீத் சகோதரர்கள் பலர் இணைந்திருக்கிறார்கள். இது போன்ற தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் அடைபவர்களிடம் தவ்ஹீத் சகோதரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனில் அந்த சகோதரர்கள் இணைந்திருக்கும் முகநூல் TNTJ வில் இது குறித்து விளக்கம் தருவது அவசியமாகிறது, அதுவும் தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாக பொறுப்பில் இருப்பவருக்கு இது கூடுதல் அவசியம்.

ஆக சகோ. ஷேக் செய்ததில் எந்த தவறும் இருக்க முடியாது, மாறாக, இதுவும் நபி வழியே என்பதை நடுநிலையுடன் சிந்திப்பவர்கள் புரிய வேண்டும். ரித்வான் செய்ததாக ஷேக் வைக்கும் விமர்சனங்கள் நியாயமான விமர்சனமா இல்லையா என்பதற்கு தன அவர் விளக்கமளிக்க வேண்டுமே தவிர, அவர் புறம் பேசுகிறார் என்று சொல்வது அர்த்தமில்லாத வாதம் என்பது தெளிவாகிறது.

ஷேக் செய்தது புறம் என்றால் ரித்வானிடம் சில கேள்விகள்..

தூத்துக்குடியில் ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்தான் என்று உங்கள் பக்கத்தில் போட்டுள்ளீர்கள். இது புறம் இல்லையா?? அவன் கற்பழித்து உண்மை என்றாலும் கூட இதை பொதுவில் சொல்லி அவனது மானத்தை சேதப்படுத்தியது எந்த வகையில் நியாயம்??

கோக கோலா நிறுவனத்தை பற்றி உங்கள் பக்கத்தில் விமர்சனம் செய்திருக்கிறீர்களே, இது புறம் இல்லையா?? அவர்கள் நிறுவனத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்றால் முதலில் கோக கோலா நிறுவனத்திடம் அல்லவா அதை நீங்கள் சொல்ல வேண்டும்?? எங்கே எப்போது சுட்டிக்காட்டினீர்கள்?? அதை செய்யாமல் எப்படி பொதுவில் வைத்து அந்த நிறுவனத்தின் மானத்தோடு விளையாடலாம்??

இலங்கை தமிழர் விஷயத்தில் கலைஞர் இரட்டை வேடம் செய்கிறார் என்றால் அதை கலைஞரிடம் நேரடியாக சுட்டிக்காட்டினீர்களா? அதை செய்யாமல் அவரின் தவறை பொது மேடையில் அம்பலப்படுத்தியது புறம் இல்லையா??

இது போன்று இன்னும் ஏராளமான செயல்களை நீங்களும் நீங்கள் ஒப்புக்கொள்ள கூடிய அனைவருமே செய்கிறோமே இவையெல்லாம் புறம் இல்லையா??
இதற்கெல்லாம் என்ன பதில்??

இதற்கெல்லாம் என்ன பதிலை நீங்கள் சொல்வீர்களோ, அதுவே சகோ. ஷேக் உங்களது பக்கத்தை விமர்சித்தது பற்றிய உங்கள் கேள்விக்கும் பதிலாய் அமையும் என்பதை சிந்திப்பவர்கள் புரியாமல் இல்லை.


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
(அல் குர்ஆன் 61:2,3)

சனி, 9 பிப்ரவரி, 2013

உண்மையை தானே படமாக எடுத்தான்? என்று சொல்பவர்களுக்கு ..




அது உண்மையா பொய்யா என்பதை அடுத்து விளக்குகிறேன். அதற்கு முன், 

அடிப்படையான முதல் விஷயம், உண்மையான செய்திகளாக கூட அது ஒரு இனத்தையோ சமூகத்தையோ ஒட்டு மொத்தமாக பாதிக்கும் என்றால்
அப்படியொரு படத்தை எடுக்க கூடாது.
இது அணைத்து நடுநிலைவாதிகளும் ஒப்புக்கொள்ளகூடியது தான்.

விடுதலை புலிகள் செய்யும் அட்டூழியங்கள் ஏராளம் உண்டு. ஆனால் அதை நிஜப்படமாக எடுத்து ""குற்றப்பத்திரிக்கை"" என்று காண்பிக்கும் போது நாம் தடை போடுகிறோம். குற்றபத்திரிக்கை படம் தடை செய்யப்பட்டதை நானும் வரவற்கிறேன்.

உண்மை என்கிற போதிலும் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. அதனால் அனைத்து தமிழர்களுக்கும் ஒரு பாதுகாப்பற்ற நிலை உருவாகலாம்.
விடுதலை புலிகள் என்கிற ஒரு இயக்கம் செய்யும் தவறுகள் ஏதோ இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களும் செய்யும் தவறுகளாக சமூகத்தின் கண்களுக்கு புலப்படும், அத்தகைய நிலையை நாம் உருவாக்க கூடாது, உண்மையை சொல்கிறோம் என்றாலும் சரியே !!

ஆக, விடுதலைபுலிகள் விஷயத்திலேயே நாம் இத்தனை கவனமாக செயல்படுகிறோம் என்றால், உலகளாவிய மதம் ஒன்றை பற்றி படம் எடுக்கையில் இதில் பாதி அக்கறையை கூட காட்ட வேண்டாமா??

சரி, அது உண்மையை தான் சொல்கிறது என்று யார் நிரூபித்தார்கள்?? குர் ஆன் வசனம் ஓதி தான் ஆப்கானில் ஒருவன் கொலை செய்யப்படுகிறான் என்பதற்கு என்ன ஆதாரம் நம்மிடம் உள்ளது?? மீடியாக்கள் சொல்வது தானே ஆதாரம்???

தவிர, சம்மந்தப்பட்ட காட்சியில் அவன் ஓதும் குர் ஆன் வசனம், கொலை செய்வதற்கோ, ஜிஹாத் என்று போவதற்கோ தூண்டும் வசனமே அல்ல, அந்த வசனத்திற்கும் அவன் செய்யும் செயலுக்கும் சம்மந்தமேயில்லை இதுவே, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதற்கு சான்று.

சம்மந்தமேயில்லாமல் ஒரு காட்சியை புகுத்தி, அல்லாஹு அக்பர் என்றோ லா இலாஹா இல்லலாஹ் என்றோ சொல்லி விட்டால் இதன் மூலம் அவன் உலகிற்கு சொல்ல விரும்பும் கருத்து என்னவாக இருக்கும்? உலகம் இதை எப்படி எடுத்துக்கொள்ளும்??

ஓஹோ, லா இலாஹ இல்லல்லாஹ் என்றால் அவர்கள் ஜிஹாத் செய்ய அழைக்கும் வார்த்தையோ?
அல்லாஹு அக்பர் என்று ஒவ்வொரு நாளும் ஐந்து முறை நம் தெருக்களில் உள்ள பள்ளிவாசல்களில் அழைக்கிறார்களே இதுவெல்லாம் அவர்களது மத வெறியின் வசனங்கள் தானோ?? என்கிற எண்ணம் பாமரனுக்கு ஏற்படாதா?? இது மத துவேஷத்தை உருவாக்காது என்று நெஞ்சின் மீது கை வைத்து தான் சொல்கிறீர்களா??

அகவே அவன் உண்மையை படமாக எடுக்கவில்லை அதற்கு ஆதாரமும் இல்லை.

சரி உண்மையை தான் எடுத்தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால் கூட, அமெரிக்காவை நல்ல பிள்ளையாகவும் ஆப்கானை கொடியவனாகவும் காட்டுவது தான் உண்மையா??
ஆப்கானியர்கள் தவறிழைப்பவர்கள் என்றே வைப்போமே, அவர்கள் செய்யும் தவறுகளை விட நூறு மடங்கு அதிக தவறுகளை அமெரிக்கா அல்லவா செய்தான்?
அமேரிக்கா படையெடுத்து நாட்டை அபகரிக்க வந்தவன், ஆப்கானியர்கள் அதற்கு எதிராக போராடியவர்கள். இது தானே நிதர்சனமான உண்மை??

இருவரிடத்திலும் தவறுகள் இருக்கின்றன என்றே வைத்துக்கொண்டால் கூட, படம் எடுக்க கூடியவன் எப்படி அதை காட்ட வேண்டும்???
படை எடுக்க வந்தவனையல்லவா கொடியவனாக காட்ட வேண்டும்?? அது தானே நியாயம்??

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் படை என்பது பல வெள்ளையர்களை கொன்று வீசியுள்ளது உயிருடன் தீயிட்டு கொளுத்தியுள்ளது காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வெள்ளையர்களின் வீடுகள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி அங்குள்ளவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதுவும் வரலாறு.
ஆனால் நாம் யாராவது இவராய் தீவிரவாதி என்போமா? மாட்டோம். காரணம், படையெடுக்க வந்தவன் வெள்ளையன். மிகப்பெரிய கொடுமைகாரன் அவன் தான். அவனை விரட்ட இவர்கள் செய்யும் தவறுகள் பொருட்டல்ல அது தேச தியாகம் என்போம் !!

இது தானே நியாயமாக சிந்திப்பவன் சொல்ல வேண்டியது???

இதே கமல்ஹாசன், விஸ்வரூபம் part 2 என்று சொல்லி இந்திய விடுதலையை மையமாக வைத்து படமெடுகிறான் என்று வைப்போம்.

அதில் வெள்ளையர்கள் என்றால் மிகவும் நல்லவர்கள் போலவும், எந்த தவறுகளுமே செய்யாதவர்கள் போலவும், பெண்கள் எல்லாம் அவனது ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதாகவும் படம் எடுத்து,
நேதாஜியின் படையை காட்டும் போது பலரையும் கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்வது போலவும், வெள்ளையர்களின் வீடுகளில் தீ வைத்து அவர்களை கொலை செய்வது போலவும், கொலை செய்யும் போதெல்லாம் பாரத் மாதா கீ ஜெ என்று கோஷம் போடுவதாகவும் காட்டினால் இதை 
வ்வொரு இந்தியனும் எப்படி எடுத்துக்கொள்வான்???

என்பதை உங்களின் நடுநிலை சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.


வெள்ளி, 25 ஜனவரி, 2013

எது கருத்து சுதந்திரம்??






நாட்டின் ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும் கட்டிக்காக்கப்படுவதில் பெரும் பங்கை நாட்டின் அரசியல் சாசனமும் அதை செயலாக்கத்திற்கு கொண்டு வரக்கூடிய ஆளும் வர்க்கமும் வகிக்கிறது.
இதற்கு அடுத்தப்படியாக  இதை உறுதி செய்வது நாட்டின் ஊடகத்துறை என்று சொன்னால் அது மிகையல்ல. வெகுஜன மக்களை எளிதில் சென்றடையவல்ல சக்தி, ஊடகங்களுக்கு உண்டு என்பதை பலரும் உணர்ந்துள்ளதன்  பயனாய், அவை பல்வேறு சமூக நல்லிணக்கங்கள், கலாசார நெறிமுறைகள், மத ஒற்றுமைகள், அரசியல் ரீதியிலான பிரச்சாரங்கள் என நாட்டு ஒற்றுமைக்கு இந்த ஊடகங்கள் பல வகைகளில் பயன்பட்டு வருகின்றன.  

மதத்தின் பெயரால் தீவிரவாதிகளாக உலா வரும மக்கள் எல்லா மதங்களிலும் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் தாண்டிய பெரும்பான்மை நடுநிலை சமூகம் என்றைக்கும் மத நல்லிணக்கத்தையும் அமைதியையுமே விரும்புகின்றது. அத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக தான் நாட்டின் அரசியல் சாசனமும் அதை செயல்படுத்தவல்ல ஆளும் வர்க்கமும் ஊடகமும் செயல்பட வேண்டும். இத்தகைய கூட்டு ஒத்துழைப்பு (collective responsibility) இருந்தால் மட்டுமே இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட இயலும்.

இதை குறிக்கோளை முன்னிறுத்தி இந்திய நாட்டு மக்கள் பயணப்பட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், எந்த ஆயுதத்தை பயன்படுத்தி இந்த நோக்கத்தை நிறைவேற்ற நாம் முயற்சி செய்கிறோமோ, அதே ஆயுததை பயன்படுத்தி இந்த நோக்கத்தை சிதைத்து, ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வேதனையான விஷயம். 

இன்றைக்கு பெருவாரியான ஊடகங்களும் அரசியல் வர்க்கமும் தங்களது முழு பலத்தையும் சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய சமூகத்தை  அடித்து ஒடுக்கவே பயன்படுத்தி வருகிறது. மதக்கலவரங்களையும் ஹிந்து - முஸ்லிம் துவேஷங்களையும் தூண்டி விட்டு அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை வஞ்சித்து பழி தீர்ப்பதை இவர்கள் வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.

பாபர் மஸ்ஜித் உடைப்பு சம்பவமானாலும், அதனையொட்டி நாடெங்கும் நடத்தப்பட்ட கலவரங்களானாலும் மும்பை வெடிகுண்டு  சம்பவங்களானாலும், இறுதியாக இன்றைக்கு சமீபத்தில் நடந்த புனே, மாலேகான் வெடிகுண்டு சம்பவங்கள் என  எதை எடுத்துக்கொண்டாலும் அவை எல்லாமே இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்கிற ஒன்றை குறிக்கோளுடனேயே நடத்தப்பட்டன.

இந்த முயற்சியின் நவீன கட்டமாக தான் ஊடகத்துறையையும் குறிப்பாக சினிமா துறையையும் இந்த சங்க பரிவார கும்பல்களும் இஸ்லாத்தின் எதிரிகளும் கையில் எடுத்துள்ளன.

வெகு ஜன மக்களை எளிதில் கவர்ந்திழுக்கும் இன்றைய சினிமா துறையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்து விட்டால் அவை அவர்களின் பாமர  மூளைக்கு எளிதில் சென்றடையும் என்கிற உண்மையை அறிந்து வைத்துள்ள இந்த கும்பல், இதற்காக மிக தீவிரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் முதல் இன்று மத வெறியன் கமல்ஹாசன் தயாரித்துள்ள விஸ்வரூபம் வரை அந்த நோக்கத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

மத சார்பற்ற நாடு என்று பீற்றிக்கொள்ளும் சில அறிவு ஜீவிகள், இது போன்ற மத துவேஷத்திற்கு இடமளிக்காமல் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும் என்கிற நோக்கமில்லாமல், இது போன்ற சதி திட்டங்களின் மூலம் முஸ்லிம்கள் உணர்வாலும் உடலாலும் பாதிக்கப்படுவதில் குளிர் காய்ந்து வருகின்றனர். இதற்கு இவர்கள் சொல்லும் ஒரே சால்ஜாப்பு அவை எல்லாம் அவர்களது கருத்து சுதந்திரம், அதை நாம் தடுக்க முடியாது என்பதாகும்.

எது கருத்து சுதந்திரம்?

மாலேகான் குண்டு வெடிப்புக்கும் நாட்டில் நடந்த இன்னும் ஏராளமான குண்டு வெடிப்புகளுக்கும் பாஜக மற்றும் சங் பரிவார கும்பல் தான் காரணம் என்று மத்திய அரசாங்கம் கூறுவதை அடிப்படையாக வைத்து ஒருவன் சினிமாப்படம் எடுத்தால் அது அவனது கருத்து சுதந்திரம் என்று இந்த நாடு அனுமதிக்குமா? இந்த அறிவு ஜீவி கும்பல் ஒத்துக் கொள்ளுமா?


மும்பை கலவரத்தின் எதார்த்த முகத்தை காட்டாமல் பொய்களையும் கட்டுக்கதைகளையும் வைத்து சினிமா எடுத்தானே மணிரத்தினம், அதற்கு பதிலடியாக, உண்மையில் அங்கே என்ன நடந்தது, முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டார்கள், RSS, சங்க பரிவார, விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பல் அங்கே நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் என்னன்ன என்பதை விளக்கி ஒரு கதையை திரைப்படமாக எடுத்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? அதையும் கருத்து சுதந்திரம் என்று கூறி அனுமதிக்கும்மா இந்த கும்பல்??


கோவை கலவரத்திற்கு தமிழக காவல்துறை தான் காரணம் என்று ஒருவன் சினிமா எடுத்தால் தமிழக அரசாங்கம் அத்திரைப்படத்தை அனுமதிக்குமா?


பாபர் மஸ்ஜிதை இடித்தது அப்போதைய காங்கிரஸ் மற்றும் அத்வானி தலைமையிலான பாஜக கும்பல் தான் என்பதை விளக்கி ஒருவன் படம் எடுத்தால் அதை ஒப்புக்கொள்வார்களா? 


இலங்கையில் நடக்கும் போர்களுக்கும் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கும் விடுதலைபுலிகள் தான் காரணம் என்றும் அதை தடுத்து அங்குள்ள மக்களை பாதுகாக்கும் வேலையை தான் இலங்கை அரசு செய்து வருகிறது  என்றும் ஒருவன் சினிமாப்படம் எடுத்தால் அது அவனது கருத்து சுதந்திரம் என்று இந்த நாடு அனுமதிக்குமா?


சர்ச்சைக்குரியதாக அறியப்படும் இது போன்ற விஷயங்களை திரைப்படமாக எடுத்தால் அதை கூட தடுப்பதற்கு கங்கணம் கட்டும் இந்த அரசு, ஒட்டு மொத்த ஒரு சமூகத்தையும் இழுவுப்படுதும் நோக்கில் திரைப்படம் எடுப்பதை மட்டும் கருத்து சுதந்திரம் என்கிற போர்வையில் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய விஷமிகள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டுள்ள உரிமை என்பது உண்மையாக இருக்குமானால் முல்லை பெரியாறு அணைக்கட்டு தமிழகத்தின் துரோகத்தின் காரணமாக உடைந்து அதனால் பல்லாயிரக்கணக்கான கேரளா உயிர்கள் பலியாயின என்று விளக்கி எடுக்கப்பட்ட திரைப்படதையும் அதே உரிமை கொண்டல்லவா தமிழக அரசு பார்த்திருக்க வேண்டும்?
அதை ஏன் தடுத்தார்கள்??

கருத்து சுதந்திரம் என்கிற பெயரை சூட்டிக்கொண்டு எதை வேண்டுமானாலும் சமூகத்தில் விதிக்கலாம் என்கிற வாசலை இவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஆக்குகிரார்களா?  அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழுவுபடுத்தி அடக்கி ஒடுக்குவதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்களா?? 

கருத்து சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு படம் எடுத்த இந்த பார்ப்பனம் கமலஹாசன் இதே சுதந்திரத்தை பயன்படுத்தி மாலேகான் தீவிரவாதத்தை பற்றி படம் எடுப்பானா??  நாட்டின் பெருவாரியான குண்டு வெடிப்புகளுக்கு சங்க பரிவாரத்தின் அந்த பெண் சாமியாரும் அவளுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கும் பாஜகவும் தான் காரணம் என்ன்பதை விளக்கி படம் எடுப்பானா??

இதே  உரிமையை பயன்படுத்தி குஜராத் கலவரத்தை பற்றியும் அதற்கு முழு முதற் காரணமான நரேந்திர மோடியை விமர்சனம் செய்தும் படம் எடுப்பானா?? அந்த திராணி இருக்கிறதா இவனுக்கு? 

முஸ்லிம்களை பிடித்து எங்கள் காளிக்கு பலி கொடுப்போம் என்று பச்சையாக தீவிரவாத விதையை இட்டுள்ள இந்து முன்னணி, இவர்களின் தீவிரவாதத்தை படம் எடுத்து மக்கள் முன் வெளிச்சம் போட்டு கட்டும் திராணி இவனுக்கு இருக்கிறதா??

எந்த பாமரனானாலும் அவனை மூளை சலவை செய்து, தங்களது தீவிரவாத பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும் RSS இன் உண்மை முகத்தை எந்த ஊடகமாவது வெளிக்காட்டியதா?

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே போன்றவர்களின் உண்மை கூற்றுக்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுக்க துப்பு கெட்டவர்கள், அமைதியையும் சாந்தியையும் விரும்பக்கூடிய முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டும் பச்சை துரோகத்தை செய்கிறார்கள் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் தான் என்பதை அடையாளம் கண்டு கொள்ள இதை விட வேறு ஆதாரம் அவசியமில்லை.

ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி சொல்வார்கள். Call the dog mad and then kill it ! அதாவது, தெருவில் அமைதியாக சென்றிருக்கக்கூடிய நாயை அடித்துக்கொன்று விட்டால் ஏண்டா அப்பாவி, வாயில்லா ஜீவனை கொலை செய்தாய் என்று பலரும் கேட்டு விடுவார்கள் என்பதால் முதலில் அந்த நாய்க்கு வெறிநாய் பட்டம் சூட்டி விட்டு அதன் பிறகு கொலை செய்து விடுவது. பிறகு யாரும் நியாயம் கேட்க வர மாட்டார்கள்.

அதை போல இஸ்லாம் என்கிற ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் முதலில் அந்த இனத்தின் உண்மை முகத்தை மறைத்து, உண்மைகளை திரித்து , இஸ்லாமும் புனித குர் ஆனும் கற்ப்பிக்ககூடிய சட்டங்களில் சேற்றை வாரி பூசி, இது அழித்து ஒழிக்கப்பட வேண்டிய ஒரு இனம் தான் என்கிற செய்தியை மக்கள் மனதில் விதைத்து அதன் பிறகு சிறிது சிறிதாக அழிக்க நினைக்கின்றனர்.

அந்த நோக்கத்தை அடைவதற்கான அடுத்தடுத்த படிகள்  தான் இந்த அயோக்கியன் கமல்ஹாசனும் அவனுக்கு உறுதுணையாய் நின்று அவற்றுக்கு  முட்டுக்கொடுத்துக்கொண்டு வரும் சங்க பரிவாரங்களும் செய்து வரும் சூழ்ச்சிகள். 

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (திருக்குர் ஆன் 9:32) 

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களின் அவசியமும் இந்திய ஊடகங்களின் சமீபத்திய முரண்பாடுகளும் - முழு தொகுப்பு






இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய அரை வேக்காட்டுத்தனமான விமர்சனங்களை வைக்கும் இரட்டை முகங்களுக்கு தக்க மறுப்பு 





இஸ்லாமிய குற்றவியல் சட்டம் பற்றி ஆனந்த விகடனின் விஷமத்தனத்திற்கு மறுப்பு 

http://onlinepj.com/unarvuweekly/vikadakkomaliyil_therukkoothu/



இஸ்லாமிய குற்றவியல் சட்டம் பற்றி மனுஷியபுத்திரன் என்கிற அதிக பிரசங்கியின் வறட்டு வாதங்களுக்கு பதிலடி 





இலங்கை பெண் ரிசானா சவூதி அரசால் தண்டிக்கப்பட்டது சரி தான்.





சவூதி அரசு நீதியை தான் நிலைநாட்டியுள்ளது 

http://onlinepj.com/unarvuweekly/risana_nilai_nattapatta_neethi/



ரிசானா விஷயமாக மாற்று  மதத்தவர் எழுப்பும் கேள்விகளும் அதற்க்கான தக்க பதில்களும்.

http://onlinepj.com/unarvuweekly/josbinbabavin_kuruttuparvai/



இஸ்லாமிய சட்டம் தான் ஒரே தீர்வு - மெய்ப்பிக்கும் நாட்டு நடப்புகள் மற்றும் ஊடகங்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள்.




சமீப காலமாக இந்தியாவில் அளிக்கப்பட தண்டனைகளின் அவல நிலை 





உண்மையை உணர மறுக்கும் கூட்டத்தாரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் 



இஸ்லாமிய சட்டங்களை நோக்கி இந்தியாவின் பயணம் ..
http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/islamiya-satathai-nokki-india/

http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/karpazipukuku_yar_karanam/

புதன், 16 ஜனவரி, 2013

ஆய்விற்கு பிறகு மாற்றப்பட்ட சட்டங்கள்




முழுமையான ஆய்விற்கு பிறகு மாற்றப்பட்ட சட்டங்களில் சில ..



1. பெண்கள் கப்ர் ஜியாரத் செய்தல்.

கப்ர் ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்று திர்மிதி 294 ஹதீஸை அடிப்படையாக வைத்து பெண்கள் கப்ர் சியாரத் செய்வது கூடாது என்று இது நாள் வரை விளங்கி வைத்திருந்தோம். ஆனால் இந்த ஹதீஸை  அறிவிப்பவர்களில் ஒருவரான அபு சாலிஹ் என்பவர் பலகீனமானவர் என்று அறியப்பட்டுள்ளது.

மேலும் கப்ர் சியாரதிற்கு செல்லும் போது ஓத வேண்டிய துஆவை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்  என்கிற 
முஸ்லிம் 1774 ஹதீசையும், கப்ர் ஜியாரத் செய்வது மரணத்தை நினைவுப்படுத்தும் என்கிற முஸ்லிம் 1777 ஹதீசையும் வைத்து பார்க்கையில் மரணத்தை நினைவுப்படுத்தும் விதமாக பெண்களும் ஆண்களும் கபூர் ஜியாரத் செய்யலாம் என்று விளங்குகிறது.


2. நோன்பு திறக்கும் போது ஓத வேண்டிய துஆ :

தஹபள்ளமவு என்று துவங்கக்கூடிய துஆவை ஓதுமாறு அபூதாவூத் 2010 இல் பதிவாகியுள்ள ஹதீஸ் பலகீனமானது என்று இப்போது அறியப்பட்டுள்ளது. இதில் வரக்கூடிய மர்வான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். ஆகவே இதை ஓதுவது கூடாது.


3.வெள்ளிக்கிழமை சூரதுல் கஹ்ப் ஓதலாமா?


ஹாகிம் 3392 வில் பதிவாகியுள்ள ஹதீஸில் ஜூம்மா நாளில் கஹ்ப் சூராவை ஓதினால் அடுத்த வாரம் முழுவதும் அவருக்கு பிரகாசம் நீடிக்கும் என்று வரக்கூடிய ஹதீஸை நம்பி இதுநாள் வரை இது சுன்னத்தான காரியமாக நம்பி வந்திருந்தோம். அனால், இந்த செய்தி பலகீனமானது என்று தற்போது அறியப்பட்டுள்ளது.
அதோடு, இந்த ஹதீசின் சனது நபி (ஸல்) அவர்கள் வரை செல்லாமல் சஹாபியுடன் முற்றுப்பெற்று விட்டது என்கிற காரணத்தாலும் இதை ஏற்க முடியாது.

கஹப் சூரா சிறப்புக்குரியது என்பதற்கு வேறு பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன என்றாலும் வெளிக்கிழமை அன்று ஓதினால் சிறப்பு என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.



4. தொழுகையில் சப்தமாக ஆமீன் கூறுவது கட்டாயமா?

தொழுகையில் ஆமீன் என்பதை கண்டிப்பாக சப்தமாக ஓத வேண்டும் என்பதற்கு இது நாள் வரையில் பைஹகி 2556 ஹதீஸை ஆதாரமாக கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த ஹதீஸை அறிவிப்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு வந்தவர் என்பதால் இதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சம்மந்தமில்லை என்பது தற்போது அறியப்படுகிறது. ஆகவே நபி சம்மந்தப்படாத ஒன்றை சுன்னத் என்றோ கட்டாயம் என்று கருதுவது கூடாது.

இமாம் பாத்திஹா சூராவை ஓதி முடித்தால் ஆமீன் சொல்லுங்கள் என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுலளர்கள், இந்த கட்டளையானது சப்தமிட்டு சொல்வதையும் குறிக்கும்  மெதுவாக சொல்வதையும் குறிக்கும் என்பதால் தொழுகையில் ஆமீன் என்பதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதே சரியான முடிவாகும்.


5. நடு விரலில் மோதிரம் :அணிதல் 

நடு விரலிலும் அதற்கு அடுத்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருந்தார்கள் என்கிற கருத்துப்பட முஸ்லிம் 3910 வில் ஒரு ஹதீஸ் இருப்பதை வைத்து நடு விரலில் மோதிரம் அணிய கூடாது என்கிற நிலைபாட்டை முன்னர் எடுத்திருந்தோம்.

ஆனால், ஹதீஸை கவனமாக படிக்கும் போது , நடு விரலா அடுத்த விரலா என்கிற சந்தேகத்தில் தான் அந்த அறிவிப்பாளர் அந்த ஹதீசை அறிவிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

மற்றுமொரு ஹதீஸில் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் அணிவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று வருகிறது. அனைத்தையும் வைத்து பார்க்கையில் எந்த விரலில் அணிவது கூடாது என்கிற சட்டம் சந்தேகத்திற்கு உள்ளானதாகவே இருக்கிறது. சந்தேகதிற்குரியத்தை நாம் பின்பற்ற முடியாது என்பதால் எந்த விரலிலும் மோதிரம் அணியலாம் என்கிற முடிவுக்கு தான் வர வேண்டியுள்ளது.