திங்கள், 23 ஜூலை, 2012

ரமளானுக்கென்று சிறப்பு தொழுகை உண்டா?





அஸ்ஸலாமு அலைக்கும்

ரமளானுக்கென்று தஹஜ்ஜத் அல்லாத வேறு சிறப்பு தொழுகைகள் உள்ளன  என்கிற தவறான வாதங்களுக்கு இங்கு தக்க மறுப்புகள் தரப்பட்டுள்ளன. மின்னஞ்சல் மூலமாக நடந்த இந்த கருத்து மோதல் இயன்ற வரை முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது.






2010/9/14 Nashid Ahmed 


எனில், இரவுத் தொழுகை ஃபர்ளுத் தொழுகைகளைவிட மேன்மையானதா? ஏனெனில், நபிகளார் (ஸல்) அவர்கள் ஃபர்ளுத் தொழுகைகளைப் பற்றி இந்த ஹதீதில் கூறவில்லை

இரவு தொழுகையை தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது எனது கூற்றல்ல!, ரசூல் (ஸல்) அவர்களின் கூற்று. அது பர்ளு தொழுகையை விட மேலானதா என்பது என்னை நோக்கிய கேள்வியா அல்லது ரசூலை நோக்கியா?

ஒரு வாதத்திற்கு, ரமலான் இரவுக்கென்று சிறப்பு தொழுகைகள் உள்ளன என்றே வைத்துக்கொள்வோம்.மற்ற நாட்களில் இல்லாத பிரத்தியேகமான தொழுகையை தான் ரசூல் அவர்கள் பாவங்களை போக்கக்கூடியது என்று சொல்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம்.
அப்படியானால், அது மட்டும் பர்ளு தொழுகையை விட சிறப்பானதாகி விடுமா?

என்னை நோக்கி கேள்வி எழுப்புவதாக நினைத்து உங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள்.

உங்கள் வாதப்படி, ஒன்று பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற ஹதீஸை மறுக்கிறீர்கள், அல்லது, பர்ளான தொழுகையை விட, ரமளானில் இரவு தொழுகை மேலானது என்று கூறவருகிறீர்கள்.
இரண்டில் எதை சரி என்று சொல்ல வருகிறீர்கள்?


ரமளான் இரவுகளில் நின்று வணங்குமாறு நபிகளார் (ஸல்) சிறப்பாகக் கூறவேண்டிய அவசியம் என்ன?


அது ரமலான் என்பதால்!
ரமளானில், பார்ளு தொழுகைக்கு கூட அதிகப்படியான நன்மைகள் கிடைக்குமே! மற்ற மாதங்களில் நாம் தொழும் தொழுகையானாலும், இன்ன பிற திக்ருகள், வணக்கங்கள், துஆக்கள் ஆனாலும் சரி, மற்ற நாட்களை விடவும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து ரமளானில் செய்வது அதிக நன்மையை ஈட்டு தரும். அந்த வகையில், இரவு தொழுகையையும், ரமளானில் பேணுதலோடு தொழுதால், மற்ற நாட்களில் அல்லாஹ் தரும் அருளை, ரஹ்மத்தை விட அதிக ரஹ்மத்தை ரமளானில் இறக்குவான், என்பது தான் அதன் பொருளே தவிர, மற்ற நாட்களில் இல்லாத வித்தியாசமான தொழுகையை தொழ வேண்டும் என்பது அதன் அர்த்தம் அல்ல!.


மற்ற நாள்களில் தொழாவிட்டாலும் பரவாயில்லை. ரமளானில் மட்டுமேனும் தொழுது கொள்ளுங்கள் என்று நபித்தோழர்களுக்கு நபிகளார் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்களா? அல்லது மற்ற நாள்களில் தொழும் தொழுகை தவிர மேலும் அதிகமாகத் தொழுது கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்களா?


மேலும் அதிகமாக தொழுமாறு சொல்லப்படவில்லை.

ரமளானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் ஒரே மாதரியான தொழுகையை தான் ரசூல் அவர்கள் தொழுதுள்ளார்கள், என்பது ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.

(இதற்கு இதுவரை தங்களால் எந்த மறுப்பும் சொல்ல இயலவில்லை !)

நான் ஆதாரமாகக் குறிப்பிட்ட ஹதீதில் இருந்து ரமளான் இரவுகளில் கூடுதலாகத் தொழ வேண்டும். அதாவது சிறப்புத் தொழுகை உண்டு என்றே நான் புரிந்து கொண்டுள்ளேன்.

கூடுதலாக தொழுவதற்கு அதில் இருக்கும் ஆதாரத்தை காட்டுங்கள்.!



எனது கேள்வி இரண்டு இன்னும் மிச்சமாகவே உள்ளது.

1 . ஆயிஷா அவர்களது ஹதீஸை குறித்த உங்கள் பதில் என்ன?

2 . சுன்னத்தான இரவு தொழுகையை ரமளானில் தொழுவதற்கும் மற்ற நாட்களில் தொழுவதற்கும், (தொழுகை முறையிலோ, ரக்காத்களிலோ..) என்ன வேறுபாடு?


----------------------------------------------------------------------------------------------------



2010/9/14 இப்னு அலிய் 

அன்புச் சகோ. நாஷித்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் தூதரை நோக்கி கேள்வி கேட்பது போலவா எனது வாக்கிய அமைப்பு இருந்தது? அவ்வாறு இருக்கவில்லை என்பதற்கு அல்லாஹ்வும் இக்குழுமமும் சாட்சியாக உள்ளனர். அவ்வாறுதான் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நினைப்பீர்களாயின் அந்த வரிகளை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். வாதம் திசைமாறிவிடக் கூடாது. கைர்.

ரமளான் மாதத்தில் சிறப்பாக ஒரு தொழுகையை தொழுது கொள்ளுங்கள் என்று நபிகளார் கூறுவதாகவே அந்த ஹதீதில் இருந்து நான் புரிந்த கொண்டுள்ளேன். நான் புரிந்து கொண்டுள்ளது போன்றே ஹதீதுக் கலை இமாம்களும் புரிந்து கொண்டுள்ளார்கள் என்ற குறிப்பையும் தந்துள்ளேன்.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீது குறித்து....

இந்த ஹதீதை நான் மறுக்கவில்லை.

இந்த ஹதீது தஹஜ்ஜுத் மற்றும் வித்ரு சம்பந்தமானது என்பதே எனது நிலைப்பாடு.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடம் கேள்வி கேட்பவர் எந்தத் தொழுகை குறித்து கேள்வி கேட்கிறார் என்ற குறிப்பு இல்லை. ஆயிஷா (ரளி) அவர்களின் பதில் மூலமாகவே கேள்வி கேட்டவர் தஹஜ்ஜுத் மற்றும் வித்ரு தொழுகை குறித்து கேட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறோம். மாறாக, ஆயிஷா (ரளி) அவர்களின் பதிலை விட்டுவிட்டு, கேள்வி கேட்டவர் எந்தத் தொழுகை குறித்து கேள்வி கேட்டார் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?



எனது இரண்டு கேள்விகள் இன்னும் மிச்சமாகவே உள்ளன, என்பதை உங்கள் நினைவுக்கு தருகிறேன்.


1 . ஆயிஷா அவர்களது ஹதீஸை குறித்த உங்கள் பதில் என்ன?

இதற்கு கடந்த மடலில் நான் பதில் அளித்துவிட்டேன். இது தஹஜ்ஜுத் மற்றும் வித்ரு தொழுகை பற்றிய ஹதீது. இதனை நீங்களும் உங்களின் கடைசி மடலில் ஒப்புக் கொண்டீர்கள்.

2 . சுன்னத்தான இரவு தொழுகையை ரமளானில் தொழுவதற்கும் மற்ற நாட்களில் தொழுவதற்கும், (தொழுகை முறையிலோ, ரக்காத்களிலோ..) என்ன வேறுபாடு?

இதற்கும் ஏற்கனவே பதில் அளித்துள்ளேன். தஹஜ்ஜுதுக்கும் ரமளான் சிறப்புத்தொழுகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கு முன் ரமளானில் சிறப்புத் தொழுகை உண்டா இல்லையா என்பதில் முடிவு எட்டப்பட வேண்டும்.

சிறப்புத் தொழுகை உண்டு என்பதற்கு என் தரப்பில் ஹதீதைத் தந்துவிட்டேன்.

நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகமாகத் தொழவில்லை என்ற குறிப்பை நீங்கள் தருகின்றீர்கள்.

நபிகளார் (ஸல்) அவர்கள் செய்தது மட்டுமே நபிவழியன்று; அவர்கள் செய்தவை, சொன்னவை மற்றும் அங்கீகரித்தவை ஆகியவையும் நபிவழியே. இதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள்.

நான் ஆதாரமாகத் தந்த ஹதீதில் நபிகளார் ரமளானில் சிறப்பாகத் தொழுமாறு கூறியுள்ளார்கள். இதனை ஆதாரமாக நான் தந்தால், நபிகளார் தொழுதிருக்கிறார்களா? என்று கேள்வி கேட்டால் என்னவென்று சொல்வது?

நபிகளார் (ஸல்) கூறியதை நபிவழி என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா?


அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடம் கேள்வி கேட்பவர் எந்தத் தொழுகை குறித்து கேள்வி கேட்கிறார் என்ற குறிப்பு இல்லை.


ரமளானில் ரசூல் (ஸல் ) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பது கேள்வி. (எந்த தொழுகை? என்ற குறிப்பு கேள்வியில் இல்லைஎன்றாலும், ஆயிஷா (ரலி) அவர்களின் பதிலிலிருந்து, கேள்வி கேட்டவர் எந்த தொழுகையை குறித்து கேட்டார் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் பதில் :
"ரமளானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினோரு ரக்காத்கள் தொழுவார்கள்."

இந்த பதிலின் மூலம், கேள்வி கேட்டவர், தஹஜ்ஜத் மற்றும் வித்ரை குறித்து தான் கேட்டார் என்பது தெள்ள தெளிவாக புரிகிறது.

நீங்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.




மாறாக, ஆயிஷா (ரளி) அவர்களின் பதிலை விட்டுவிட்டு, கேள்வி கேட்டவர் எந்தத் தொழுகை குறித்து கேள்வி கேட்டார் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?



ஆயிஷா (ரலி) அவர்களது பதிலின் மூலம், கேள்வி கேட்டவர் எதை குறித்து கேட்டார் என்பது தெள்ள தெளிவாக உள்ளது!

இப்போது நீங்கள் பதில் கூற வேண்டியது, ஆயிஷா அம்மா அவர்களின் அந்த பதிலை பற்றி தான். கேள்வி கேட்டவரது கேள்வியை குறித்து நீங்கள் சிந்திக்க தேவையில்லை.



             --------------------------------------------------------------------------------------------------------------





2010/9/15 Nashid Ahmed 


வீண் விவாதமாக நீங்கள் இதை மாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது.

ஆயிஷா அவர்களிடம், ரமளானில் ரசூல் (ஸல்) அவர்களின் தஹஜ்ஜத் தொழுகையை பற்றி கேட்கப்படுகிறது.
அதற்கு அவர்கள், ரமளானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினோரு ரக்காத்கள் தொழுதாகள் என்று பதில் அளிக்கிறார்கள்."
இந்த ஹதீஸ் உங்களுக்கு சொல்வது என்ன என்பது தான் நான் கேட்க்கும் கேள்வி.
இதற்கு பதில் தராமல் காலம் கடத்துவது ஏன்?
பதில் கேட்டால்,
இது தஹஜ்ஜுத் மற்றும் வித்ரு தொழுகை பற்றிய ஹதீது.

இதை ஆதாரமாக கொண்டு, ரசூல் (ஸல்) அவர்கள் எல்லா மாதங்களிலும் பதினோரு ரக்காத்கள் தான் தொழுதார்கள், ராமலானுக்கென்று எந்த விசேஷ தொழுகையையும் அவர்கள் தொழவில்லை, என்று நான் கூறினேன்.

இல்லை, வேறு விசேஷ தொழுகை உண்டு என்றால் அது என்ன தொழுகை என்று கூறுங்கள், என்பது தான் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

சிறப்பான தொழுகை ரசூல் தொழுமாறு சொல்லியிருக்கிறார்கள், செய்தும் காட்டியிருக்கிறார்கள். ரமளானில், தஹஜ்ஜத் (11 ரக்காத்) அல்லாத வேறு தொழுகையை ரசூல் தொழவில்லை!


தொழுதார்கள் என்று சொல்லக்கூடிய நீங்கள் தான் ஆதாரம் காட்ட வேண்டும்.

            ------------------------------------------------------------------------




2010/9/15 இப்னு அலிய் 


சகோ. நாஷித்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னைவிடவும் உங்களைவிடவும் அறிந்தவர்கள் இடையேவும் ரமளான் சிறப்புத் தொழுகை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றது. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக வீண் விவாதமாக மாற்ற முயல்வதாகக் குற்றம் சாட்டாதீர்கள்.

இந்த ஹதீதை நான் புரிந்து கொண்டுள்ளது போன்றுதான், இந்த ஹதீதை உங்களுக்கும் எனக்கும் அறிவித்துத் தரும் ஹதீதுக் கலை இமாம்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வரை எனது பக்க விவாதத்தை வைத்துவிட்டேன்.

நீங்களோ அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் அறிவிப்பை மட்டும் வைத்து வாதித்து வருகிறீர்கள்.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் கருத்தை மார்க்கத்தின் ஆதாரமாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?


              --------------------------------------------------------------------------






2010/9/15 Nashid Ahmed 




உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் கருத்தை மார்க்கத்தின் ஆதாரமாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா


ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்த கருத்து மார்க்கமாகாது.
நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸ், அவரது சொந்த கருத்தல்ல!.. ரசூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்ற அவரது அறிவிப்பு பின்பற்ற வேண்டிய ஹதீஸாகும்!

என்னுடைய இரண்டு கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே தான் உள்ளன.

இந்த ஹதீசுக்கு தங்கள் விளக்கம்.

ரசூல் (ஸல்) அவர்கள் ரமளானில், தஹஜ்ஜத் தொழுகை அல்லாத வேறு தொழுகை தொழுததற்கான ஆதாரம்..

இரண்டையும் இன்னும் நீங்கள் செய்யவில்லை!


              ------------------------------------------------------------------------






2010/9/15 இப்னு அலிய் 



சகோ. நாஷித்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கீழே உள்ள ஹதீது நீங்கள் உங்கள் தரப்பு ஆதாரமாகத் தந்தது....


" ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?", என்று ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் கேட்டேன். அதற்க்கு அவர்கள், ரமலான் மாதத்திலும் மற்ற மாதங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 11 ரக்காத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை.
நான்கு ரக்காத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்க்காதே.
பின்னர் நான்கு ரக்காத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்க்காதே. பின்னர் மூன்று ரக்காத்கள் தொழுவார்கள், என்று விளக்கினார்கள்.
அறிவிப்பாளர் : அபு சலமா (ரலி)
நூல்: புஹாரி

-----------------------
கீழே உள்ளவை இந்த இழையின் உங்கள் தொடக்க கருத்தாக வைத்தவை...

12 ரக்காத்களுக்கு பிறகு விதர் தொழுதல். - புஹாரி 1198 , 992

வித்ரையும் சேர்த்து 13 ரக்காத்கள் - முஸ்லிம் 1284

10 + 1 = 11 ரக்காத்கள் - முஸ்லிம் 1222

8 + 5 = 13 ரக்காத்கள் - முஸ்லிம் 1217


மேலே நாம் சுட்டிக்காட்டிய எண்ணிக்கையிலான ஹதீஸ்களை தவிர வேறு வேறு எண்ணிக்கையில் ரசூல்(ஸல்) அவர்கள் தொழுததாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் எதுவும் ஆதாரப்பூர்வமானது கிடையாது.

---------

இனி என் கேள்வி.

நபி (ஸல்) அவர்கள் 13 ரக்அத்துகள் தொழுததாகவும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் இருப்பதாக நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். ஆனால் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களோ 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததில்லை என்கிறார்கள். இந்த கருத்து அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் சொந்தக் கருத்தா? இல்லையா?

நினைவில் கொள்ளுங்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களுடன் மட்டுமே தங்கியிருக்கவில்லை. மற்ற மனைவியருடனும் தங்கியுள்ளனர். அத்தகைய சந்தர்ப்பங்களில் நபிகளார் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துகள் தொழுதார்கள் என்று அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.



                     --------------------------------------------------------------------------








2010/9/16 Nashid Ahmed 



வ அலைக்குமுஸ்ஸலாம்.

நீங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பும் கேள்வி, உங்கள் தரப்பு வாதத்தை மேலும் பலகீனம் தான் ஆக்குகிறது.
அதை அறிவதற்கு முன்..

ஆயிஷா (ரலி) அவர்கள், ரசூல் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்காத்களுக்கு மேல் தொழுததில்லை என்று கூறியிருக்கிறார்கள் . . வேறு சில அறிவிப்புகளில் பதிமூன்று ரக்காத்கள் தொழுததாகவும் வருகிறது என்றால், உடனே ஆயிஷா (ரலி) அவர்களுடைய ஹதீஸை புறம் தள்ளி விடலாம் என்று கூறி விடுவதா???.

அதிகமான அறிவிப்புகளில், பதினறு ராக்கத்களும், அதை விட குறைவான ராக்கத்கலுமே ரசூல் அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று வருகிறது,
ஒரு சில ஹதீஸ்களில் மட்டும் பதிமூன்று ரக்காத்கள் தொழுதார்கள் என்று வருகிறது என்றால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விதம் என்னவெனில், அதிகமான நாட்களில் ரசூல் (ஸல்) அவர்கள் பதினோரோ, அதை விட குறைவாகவுமே தொழுதுள்ளார்கள் என்றும் ஒரு சில முறை அதற்கு மேல், பதினோராகவும் தொழுதுள்ளார்கள் என்றும் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், இரண்டுமே பலமான ஹதீஸ்கள் தான்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

  • அனைத்துமே அறிவிப்புகளுமே , அந்த தொழுகையை தஹஜ்ஜத் தொழுகை என்று தான் குறிப்பிடுகின்றன

  • ஆயிஷா (ரலி) அவர்களுடைய அறிவிப்பும் கூட, தஹஜ்சத்தை பற்றியது தான்.

  • எந்த அறிவிப்பிலும், இந்த ரக்காத்கள் கொண்ட தொழுகையை இந்த மாதத்தில் தொழுதார்கள் என்ற குறிப்பு இல்லை.
அதாவது, ஒரு சமயத்தில் பதினோரு ரக்காத்கள் தொழுதார்கள் என்றால் அது ராமலானா, மற்ற நாட்களா என்ற விளக்கம் இல்லை. அதிகமாக பதினோரு ரக்காத்கள் தொழுதார்கள் என்றால், அது ராமலானா, மற்ற மாதமா என்ற விளக்கம் இல்லை.
அப்படியிருக்கும் போது, நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இவ்வாறு தொழுவதற்கும் மாதத்திற்கும் சம்மந்தம் இல்லை.
நாம் விரும்பினால், ஏழோ, ஒன்பதோ, பதினொன்றோ, பதிமூன்றோ தொழுது கொள்ளலாம்.

  • ஆனால், ரமளானில் எத்தனை ரக்காத்கள் தொழுதார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்றால், இருக்கிறது.
இங்கே தான் உங்கள் வாதம் பலகீனம் அடைகிறது.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில், ரமளானில் பதினோரு ரக்காத்களை (அல்லது, அதற்கு குறைவாக..) ரசூல் (ஸல்) அவர்கள் தொழுதார்கள் என்று தான் அறிவிக்கிறார்கள்.

அது தஹஜ்ஜத் மற்றும் விதுர் தான் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

ஆக , ரமளானில் சிறப்பு தொழுகையாக ரசூல் (ஸல்) அவர்கள் தொழுதது இந்த பதினோரு ரக்காத்கள் தான் !

என்னுடைய இரண்டு கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் தரவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸை வைத்து என்னிடம் மட்டும் கேள்வி கேட்க்கிறீர்களே, அந்த ஹதீஸை நீங்கள் எவ்வாறு நம்புகிறீர்கள்? எவ்வாறு செயல்படுத்துவீர்கள்? அல்லது அது ஹதீஸ் இல்லை என்று புறந்தள்ளி விடுவீர்களா?
இதற்கு பதில் இதுவரை சொல்லவில்லை

இரண்டாவது, ரமளானில், ரசூல் (ஸல்) எத்தனை என்ன தொழுகையை சிறப்பு தொழுகையாக தொழுவார்கள், ராக்கத்கள் தொழுவார்கள் என்பதற்கு நான் ஆதாரம் காட்டி விட்டேன்.
இவை அல்லாத வேறு சிறப்பு தொழுகைகளை அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புவதாக இருந்தால், என்ன தொழுகை என்பதை ஆதாரத்துடன் கூற வேண்டும்.

இந்த இரண்டையும் இன்னும் நீங்கள் செய்யவில்லை!!


                 -----------------------------------------------------------------------




From: இப்னு அலிய்
Sent: Thu, 16 September, 2010 12:55:31


அன்புச் சகோ. நாஷித்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னுடைய கேள்வியை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இல்லை எனக்குச் சரியாகக் கேட்கத் தெரியவில்லையா? மீண்டும் என் கேள்வி....

நபிகளார் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாள்களிலும் 11 ரக்அத்கள் தொழுதார்கள் - என்பதற்கும்

நபிகளார் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாள்களிலும் 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததில்லை - என்பதற்கு வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா?

நபிகளார் (ஸல்) 11 ரக்அத்துகளுக்கும் அதிகமாகத் தொழுதுள்ளார்கள் என்ற ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளும் இருப்பதாக நீங்களே தகவல் தந்துள்ளீர்கள்.

எனில், 11 ரக்அத்துகளை விட அதிகமாக தொழுததில்லை என்று அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுவதில் விட அதிகமாக என்பது அவர்களின் சொந்தக் கருத்துதானே?

சொந்தக் கருத்தில்லை. நபிகளார் இவ்வாறுதான் செய்தார்கள் என்றால் 13 ரக்அத்துகள் குறித்து தங்களின் நிலை என்ன?


----------------------------------------------------------------------------------------------





From: Nashid Ahmed
Date: 2010/9/17



அன்புச்சகோ. இப்னு அலி,


ரசூல் (ஸல்) அவர்களின் சொல் ஒன்று இருக்கும் போது, செயலை எதற்கு ஆதாரமாக கேட்க வேண்டும், சொல் ஒன்றே போதுமே, என்ற ரீதியில் வாதம் வைக்கிறீர்கள்.

சொல்லை வைத்து அமலை விளக்கமாக அறிந்து கொள்ள இயலுமென்றால் சொல் மட்டும் போதும்.

சொல்லில் முழு விளக்கம் இல்லைஎன்றால் சொன்னதை எவ்வாறு செயல்படுத்தினார்கள் என்று பார்க்க வேண்டும்.

இங்கே ரமளானில், சிறப்பு தொழுகை தொழ வேண்டும் என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள்.

வெறும் சொல்லை மட்டும் வைத்து எவ்வாறு இந்த அமலை செய்ய முடியும்?

உங்கள் வாதப்படி, தஹஜ்ஜத் தொழுமாறும் "வேறு" ஹதீஸ்களில் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் தானே?,
"இரவில் நின்று வணங்குங்கள்", என்று. அதைமட்டும் வைத்து நம்மால் தஹஜ்ஜத் தொழ முடியாது என்பதால் அவர்கள் எவ்வாறு தொழுது காட்டினார்கள் என்பதையும் சேர்த்தே பார்க்கிறோம்.
அவர்களது செயலையும் நாம் பார்த்ததினால் தான் இன்று நம்மால் தஹஜ்ஜத் தொழ முடிகிறது.

அமல்களை செய்வதை பொறுத்தவரை, ரசூல் (ஸல்) அவர்களின் சொல்லோடு செயலும் அவசியம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் தர முடியும்.

ஆக, தஹஜ்ஜத் அல்லாத வேறு சிறப்பான தொழுகை உண்டு என்றால், அதை எப்படி தொழ வேண்டும்? எத்தனை ரக்காத்கள் தொழ வேண்டும்? இது தெரியாமல், அல்லது இதை அறிவிக்காமல் ரசூல் (ஸல்) விட்டிருப்பார்களா?

மார்க்கம் முழுமைபெற்று விட்டது என்று அல்லாஹ் கூறி விட்டானே, அது ரமலான் சிறப்பு தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதையும் சேர்த்தே தானே?

அல்லது, அந்த சிறப்பு தொழுகையை நாம் தொழ வேண்டியதில்லை, அது நபிகளாருக்கும் சஹாபாக்களுக்கும் உண்டான தொழுகை தான், என்று வாதிடப்போகிரீர்களா?

மார்க்கம் ஒன்றை செய்ய சொல்கிறதென்றால், அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்தே தான் சொல்லும்.

அடுத்து, அந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களும் தொழவில்லை என்பது போல் அர்த்தம் கொடுக்கிறீர்கள்.

நான் அரபி மூலத்தை பார்க்கவில்லை. நீங்கள் தந்த தமிழாக்கத்தின் படியே வாதம் செய்கிறேன்.
அதில், "நாங்கள் ரசூலுடன் நோன்பு வைத்தோம்", என்று ரசூலை 3rd பெர்சன் ஆக வைத்து தான் அறிவிப்பு துவங்குகிறது.

நாங்கள் ரசூலுடன் இதை செய்தோம், என்று துவங்கி, நாங்கள் தொழுதோம், நாங்கள் தொழவில்லை, என்று கூறினால், அதற்கு என்ன அர்த்தம்?
"நாங்கள்" செய்தோம் என்று தான் அர்த்தம். இந்த "நாங்களில்", ரசூல் (ஸல்) அவர்கள் சேர மாட்டார்கள்.

இதை முதல் முறை படிக்கும் போதே தெளிவாக புரிகிறதே!

இன்னும் சொல்லப்போனால், உங்கள் வாதப்படி, ரசூல் (ஸல்) அவர்கள் அந்த சிறப்பு தொழுகையை 23 , 25 மற்றும் 27 ஆகிய மூன்று இரவுகளில் மட்டும் தான் தொழுதுள்ளார்கள், மற்ற இரவுகளில் தொழவேயில்லை.

ரமலான் சிறப்பு தொழுகை என்பது இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் தானா? அது தான் உங்கள் வாதமாக ஆரம்பம் முதல் இருந்து வந்ததா?

லைலதுல் கதர் இரவாக நினைத்து இவ்வாறு சிறப்பு தொழுகை தொழுதிருக்கிறார்கள் என்று எண்ணுவதற்கும் வழியிலை.


ஏனென்றால், 21 , மற்றும் 29 இல் இதை தொழவில்லை (ரசூலும் தொழவில்லை) என்று தான் உங்கள் வாதப்படி அந்த சஹாபி கூறுகிறார்.

இது போன்ற பல அபத்தங்கள் உங்கள் வாதங்களினால் ஏற்ப்படும்.

இவைகளுக்கெல்லாம் பதில் சொல்லி, சிறப்பு தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும், எத்தனை ரக்காத்கள் தொழ வேண்டும், என்பதையும் ஆதாரத்துடன் கூறினால் மட்டுமே, உங்கள் வாதம் நிலை பெறும் .

இல்லை என்றால் மார்க்கம் முழுமையாகவில்லை என்ற கருத்து வந்து விடும்!


-----------------------------------------------------------------------------------------------













ஞாயிறு, 22 ஜூலை, 2012

தவப்பைதனி என்பதற்கு என்ன பொருள்?



அஸ்ஸலாமு அலைக்கும்.

தவப்பைதனி என்கிற வார்த்தை ஈசா நபி சம்மந்தமாக குர் ஆனில் சொல்லப்படும் வசனத்தில் (5 :117 -118 ) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் பொருளாக வேறு பெரும்பான்மையான இடங்களில் "மரணம்" என்பதையே நாம் கொள்வதால், இந்த வசனத்திலும் தவப்பைதனி என்பதற்கு மரணம் என்று பொருள் வைத்து, அதன் மூலம் ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்றும் சிலர் வாதம் வைக்கின்றனர்.

தவப்பைதனி என்பதற்கான அகராதி பொருள் மரணம் என்பதல்ல. அதன் நேரடி பொருள் கைப்பற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல் என்பதாகும்.
நேரடி பொருள் எங்கெல்லாம் பொருந்துமோ, அங்கெல்லாம் நேரடி பொருளை தான் கொடுக்க வேண்டும் என்கிற சாதாரண விதியின் படி, இந்த இறை வசனத்திற்கும் முதலில் நேரடி பொருளை தான் கொடுக்க வேண்டும். நேரடி பொருள் பொருந்தும் பட்சத்தில் அதையே தான் உறுதி செய்ய வேண்டும். பொருந்தாத பட்சத்தில் மட்டும் தன் வேறு பொருளுக்கு செல்ல வேண்டும்.

அந்த அடிப்படையில், ஈசா நபி கைப்பற்றப்பட்டார் என்று பொருள் கொள்ளும் போது, ஈசா நபி மறுமையின் அத்தாட்சியாக இருப்பார் என்கிற இறை வசனமும், அவர் இறப்பதற்கு முன் அவரை மக்கள் நம்புவார்கள் என்கிற இறை வசனமும் கச்சிதமாக பொருந்துகிறது. மேலும், ஈசா நபி மரணிக்கவில்லை , அவர் மீண்டும் வருவார் என்று சொல்லப்படுகிற ஏராளமான ஹதீஸ்களும் பொருளுள்ளதாகிறது
.
அதே சமயம், அங்கே வருகிற தவப்பைதனி என்கிற வார்த்தைக்கு மரணித்தல் என்று பொருள் வைத்தால், மேலே நான் சுட்டிக்காட்டிய அனைத்து வசனங்களும் ஹதீஸ்களும் பொருளற்றதாகி விடும்.
ஆகவே, தவப்பைதனி என்பதற்கு நேரடியான அர்த்தமான கைப்பற்றுதல் என்பதே சரியான பொருள் !!


தவப்பைதனி என்பதற்கு மரணம் என்று தான் அதிகமான இடங்களில் பொருள் என்றாலும், நேரடி பொருளான கைப்பற்றுதல் என்கிற அர்த்தத்தில் குர் ஆனிலோ ஹதீஸிலோ வேறு ஏதேனும் செய்திகளை காட்ட முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். அவர்களுக்காக கீழ்காணும் ஆதாரம்..


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஒரு பயணத்தில் -("அறப்போர் வீரனாகஎன்றும் கூறினார்கள் என்றே எண்ணுகிறேன்)- கலந்துகொண்டேன். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ள தைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும்பின்வருமாறு கூடுதலாகவும் இடம்பெற் றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிர்! (ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?'என்று கேட்டார்கள். நான் "ஆம்என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விலையும் உனக்கே உரியதுஒட்டகமும் உனக்கே உரியது. விலையும் உனக்கே உரியதுஒட்டகமும் உனக்கே உரியது''என்றார்கள்

நூல் : முஸ்லிம் 3266


இங்கே , ஒட்டகத்தின் விலையை முழுமையாக பெற்று விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கும் இடத்தில் தவப்பைதனி என்கிற வார்த்தையை தான் பயன்படுதியுள்ளார்கள் !

வஸ்ஸலாம். 

பிற இயக்கங்களை விமர்சனம் செய்வது புறம் பேசுவதா ???

அஸ்ஸலாமு அலைக்கும்.
பிற முஸ்லிம் இயக்கங்களை நாம் விமர்சனம் செய்கிற போது, நாம் புறம் பேசுவதாக நம்மை நோக்கி எதிர் விமர்சனம் செய்கின்றனர் பலர்.
இது குறித்து விளக்கமாக அறியவும், குர் ஆன் ஹதீஸ் பார்வையில், தவறுகளை விமர்சனம் செய்வதன் நிலை பற்றியும் தெரிந்து கொள்ள இதை கேட்கவும்.. 


ஷியா மதத்திலுள்ள பிரிவுகள்





ஷியா இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான பிரிவுகள்....


1. அஸ்ஸபயிய்யா
இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின் ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர்

2. அஸ்ஸைதிய்யா
அலி → ஹுஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த். இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் என அழைக்கப்படுகின்றனர்.

3. அல்கைஸானிய்யா
முஆவியா (ரழி) அவர்களின் மகன் யசீதின் ஆட்சிக் காலத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டும் என ஒரு குழு உருவானது. இவர்கள் முக்தார் இப்னு அபீ உபைத் என்பவனின் தலைமையில் ‘தவ்வாபீன்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவன் ஒரு மிகப் பெரிய பொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

4. அர்ராபிழா
இவர்கள் முன்னைய மூன்று ஆட்சியாளர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆட்சி அலி (ரழி) அவர்களுக்கும் அவரது பரம்பரைக்கும் மட்டுமே உரித்தானது. ஏனைய அனைவரது ஆட்சி முறையும் தவறானது என்று கருதுகின்றனர்.
5. அல்குராபிய்யா (காகம்):
அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இ ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டும் – சபிக்கும் கூட்டம்
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)
6. அன்னமிரிய்யா:
முஹம்மத் அலி பாதிமா ஹஸன் ஹுஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)
7. முஹம்மதிய்யா:

அலி → ஹுஸைன் → அப்துல்லாஹ் → முஹம்மத். இவர்கள் தங்களது இமாமாகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியாகவும் முஹம்மத் என்பவரைக் கருதுகின்றனர்.
முஹம்மத் என்பவர் ஹி 93ல் பிறந்தார். ராபிழாக்கள் இவரை ‘அந்நப்ஸ் அஸ்ஸகிய்யா’ பரிசுத்த ஆத்மா என்ற புனை நாமமிட்டும் அழைத்தனர். இவர் ஹிஜ்ரி 145ம் ஆண்டுகளில் அப்பாஸிய ஆட்சியாளர் அபூ ஜஃபர் அல் மன்சூர் என்பவருக்கு எதிராக மதீனா எல்லைப் புறங்களில் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது அபூ ஜஃபர் அல் மன்சூர் ஒரு படையை அனுப்பினார். சண்டை உக்கிரமாக நடைப்பெற்றது. எனினும் தளபதியின் தந்திரோபாயத்தால் முஹம்மத் களத்தில் கொலை செய்யப்பட்டார். தளபதி அவரது தலையைத் துண்டித்து அபூ ஜஃபர் அல் மன்சூருக்கு அனுப்பிவைத்தார்.
8. அல் – இஸ்னா அஷரிய்யா ஷ இமாமிய்யா:

இவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஆட்சி உரிமை அலி (ரழி) அவர்களுக்கே வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள். முன்னைய ஆட்சியாளர்களைத் துரோகிகளாகக் கருதுகின்றனர். அரசாட்சி இமாம் என்ற நிறுவனமுறைமையிலேயே இயங்க வேண்டும் என்பதோடு வரம்பு மீறிய பல வழிகெட்ட கொள்கைகளுடன் உள்ளனர். இக்குழுவினர் ஈரான் ஈராக் பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளில் கனிசமாக வாழ்கின்றனர்.



ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)





அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!

இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.
பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.

குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)

இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்! இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள்.

அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)

இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை – அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான். இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.

“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) (அல்குர்ஆன் 60:4)
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.

அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)

இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான். ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர். முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு – நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான்.
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான்.

அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)
மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.

ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன் 80:1-ரி10)
நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.

ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை. இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான். அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.

அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 60:8,9)

இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை. ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-ஷம்சுல்லுஹா

கர்பிணிகள் நோன்பை களா செய்ய தேவையில்லையா?



அஸ்ஸலாமு அலைக்கும்..

கர்பிணிகளும் பால் ஊட்டும் தாய்மார்களும் கடமையான நோன்பை வைக்க தேவையில்லை எனவும், அவர்கள் வேறொரு நாளில் அதை களா செய்ய வேண்டும் எனவும் நாம் கூறி வருகிறோம். 

இதற்கு மாற்றமாக, கர்பிணிகள் விட்டநோன்பை மீண்டும் வைக்க தேவையில்லை, அதற்கு பகரம் ஒரு ஏழைக்கு உணவளித்தால் போதும் என்று ஒரு இணையதளத்தில் (www.tamililquran.com) எழுதியிருந்தனர். அதற்கு ஆதாரமாக கீழ்காணும் ஹதீசையும் தந்திருந்தார்கள்.

<<<<< நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்  >>>>>


இது குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு, இந்த ஹதீஸை அவர்கள் சுட்டிக்காட்டிய முஸ்லிம் நூலில் தேடினோம். ஆனால், இத்தகைய எந்த ஹதீசும் முஸ்லிம் நூலில் காணப்படவில்லை. மார்க்கத்தில் இவ்வளவு பொடுபோக்காக இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்துடன் இந்த இணையதளத்தை நாம் தொடர்பு கொண்டு இந்த ஹதீஸின் சனதையும், ஹதீஸ் எந்த நூல், எந்த பாகத்தில் உள்ளது என்கிற விபரத்தையும் தருமாறு கேட்டிருந்தோம்.

இதற்கு பதில் சொன்ன அந்த இணையதள நிர்வாகிகள், தாங்கள் அந்த கட்டுரையில், சம்மந்தப்பட்ட ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகி உள்ளதாக தவறாக எழுதியிருக்கிறோம், அது முஸ்லிமில் இல்லை, ஆனால் அபு தாவூதில் உள்ளது. அபூதாவூத் 956 தான் அந்த ஹதீஸ் எண், என்று பதில் அளித்தார்கள்.

அபு தாவூத் நூலில் நாம் சென்று தேடிய போது, குறிப்பிட்ட அந்த ஹதீஸ் இப்னு அப்பாஸ் அவர்கள் சொன்னதாக மட்டுமே இருக்கிறதே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இல்லை ! ஆகவே முதலில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அவர்கள் சொன்னதும் தவறு என்று தெளிவாகி உள்ளது. 

நபி சொல்லாத காரணத்தால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக, மார்க்கத்தின் கட்டாயக்கடமைகளில் ஒரு விஷயத்தை ஒரு சாரார் செய்யவே தேவையில்லை என்று முடிவு செய்வதாக இருந்தால் அதை ஒரு சஹாபி சொன்னால் போதாது, வஹீயின் மூலமாக மட்டுமே சொல்லப்பட வேண்டும். 

சுட்டிக்காட்டிய பின்னர் சம்மந்தப்பட்ட ஹதீஸை நீக்கிய இணையதளத்தாருக்கு நன்றி. இருப்பினும், தொடர்ந்து சஹாபியின் கூற்றை ஆதாரமாக வைத்து கர்பிணிகள் நோன்பை களா செய்யவே தேவையில்லை என்று பத்வா கொடுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

வஸ்ஸலாம். 



சனி, 21 ஜூலை, 2012

தர்காக்களில் நடப்பது என்ன? – ஒரு புலனாய்வு ரிப்போர்ட்!



காணத்தவறாதீர்கள்!

60அடி பாவா, 45 அடி பாவாவாக மாறிய அதிசயம்(?)
கடிதம் எழுதிப்போட்டால் படித்துப் பார்த்து பதில் தரும் ராவுத்தர் அப்பா அவுலியா(?)
காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் அற்புத அவுலியா(?)
பீடிகளை காணிக்கை கேட்கும் பீடி மஸ்தான் அவுலியா(?)
செங்கற்களை உணவாக வழங்கும் சையது சுல்தான் அவுலியா(?)
நடக்கப்போவதை கனவில் சொன்னாரா ஆத்தங்கரை சையதம்மா(?)
அக்கு அக்காக கழன்று விடும் அவுலியாக்களின் உடல் பாகங்கள்(?)
தமிழ்நாட்டிலிருந்தே கஃபத்துல்லாவில் தொழும் அதிசயம்(?)
நெற்றிக்கண்ணால் அல்லாஹ்வை பார்க்கும் அற்புதம்(?)
எப்படியெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்?
எப்படியெல்லாம் மக்கள் வழிகெடுகின்றார்கள்?
எப்படியெல்லாம் மக்களை வழிகெடுக்கின்றார்கள்?
என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கும் ஒரு புலனாய்வு ரிப்போர்ட் –
தர்காக்களில் நடப்பது என்ன?
தினந்தோறும் அதிகாலை 3.30மணிக்கு மெகா டிவியில் காணத்தவறாதீர்கள்.